Wednesday, April 29, 2009
இறுதி யுத்தம்
This video is meant to persuade the Tamils in Tamil Nadu not to support the Indian Congress party in this coming election because the Congress Party fully supported the genocidal war against Tamils in Sri Lanka. This video was passed to us by Tamil well wishers. We are just passing it to you.
For full video: http://www.tubetamil.com/view_video.php?viewkey=7607ce912ab7fe7106f3
To download: http://www.tamilsforobama.com/video/Final_war.flv
முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு ஒரு கடிதம்

“ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை... கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை!” இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டு தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்ற ஒரு ஈழத் தமிழ்மகள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை வரைந்திருக்கின்றார்.
அக்கடிதத்தின் முழுவடிவம்:-
வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே,
தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா,
வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா,
அந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன்.
"ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா" என்று வன்னியில் இருந்து கதறும் ஒரு பிஞ்சுக் குழந்தையொன்றின் கதறலை கேட்டு மனமுடைந்துபோய் எழுதும் மடல் இது. நான் ஈழத்திலிருந்து அகதியாகி அந்நிய தேசமொன்றில் வசிக்கும் பாவப்பட்ட தமிழிச்சி. தங்களை அவமானப்படுத்துவது எனது நோக்கமில்லை... புண்ணைச் சொறிவதில் எனக்கு இன்பமேதுமில்லை.
நான் கனடாவிற்கு எட்டு வயதில் ஏதிலியாய் வந்தேன். இப்போது எனக்கு வயது இருபத்து நாலு. கனடா வந்தாலும் தாய் நாட்டையும் தமிழையும் மறக்கவில்லை... மறக்கவும் மாட்டேன். தங்களோடு ஒப்பிடும்போது நான் ஒரு சிறுமி. அஃதிருக்க, மேன்மக்கள் மேன் மக்களே என்ற தமிழ் வார்த்தைகள் உங்களுக்கு மட்டும் பொருந்தாமல் போனதேன்.
நீங்கள் தமிழுணர்வு மிக்கதொரு சிறந்த கதை ஆசிரியர் என்றுதான் இதுவரை தெரிந்து வைத்தோம். ஆனால் தாங்கள் உலகமகா நடிகன் என்று ஈழப் பிரச்சினை தொடர்பான உங்கள் தந்திகளாலும், கேள்வி பதில் அறிக்கைகளாலும் இப்போது அறிந்து கொண்டோம்.
உங்களிடம் இலைமறை காயாய் மறைந்திருந்த நடிப்புத் திறமையை வெளியே கொணர்ந்து வந்த அன்னை சோனியாவுக்கு தமிழ்த்திரையுலகின் சார்பில் கோடி நன்றி. இதற்கு விலையாக ஈழத்திலே கருவிலேயே குண்டுபட்டுச் செத்துப் போன சிசுக்களை யாது செய்ய?
பதவி ஆசைக்காகவும், அரசியல் குப்பைக் காரணங்களிற்காகவும் எங்கள் ஈழத்தமிழ் மக்களை பலியாக்காதீர்கள். அவர்கள் இரத்தம் சிந்துவதைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் வரவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. பதவியை இராஜினாமா செய்யப் போகிறீர்கள் என்று ஆரம்பி்த்து உண்ணாவிரதம் வரை உங்கள் மெகா தொடர் நாடகம் கலைஞர் ரீவியில் வரும் நாடகங்களைப் போலவே இன்னும் தொடர்கின்றது.
இன்னும் ஈழத்தமிழர் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை நீங்களே உங்கள் கபட நாடகங்களால் கெடுத்து விடுவீர்கள் போல் உள்ளது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஐயா. ஈழத்தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் வேறு வேறல்ல. அனைவரும் தமிழர்தான். தமிழன் என்றால் மானம் மரியாதைக்குத் தான் பெயர் போனவன். நீங்களோ மரியாதைக்குத்தானும் ஒரு மானமுள்ள இனப்பற்றுள்ள தமிழனாய் இருக்க விரும்புகிறீர்கள் இல்லை.
உங்களை மாதிரி பதவி ஆசைக்காக சோனியா அம்மையார் மற்றும் மகிந்த போன்றவர்களின் காலைப் பிடித்துக்கொண்டிருக்கம் சுயநலவாதிகளால்தான் எமக்கு இன்னமும் ஈழம் கிடைக்கவில்லை...விடிவும் கிடைக்கவில்லை.
இந்த வயதில் உங்களுக்கு பதவிப் பித்துத் தேவைதானா? பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். தங்களுக்கு அதுவும் பொய்த்துப் போயிற்றே. பாதி நாட்கள் முதுகு வலி என்று வைத்தியசாலையில் படுத்துறங்கி அறிக்கைப் போர் புரிந்து அரசியல் என்னும் சாக்கடையில் புரண்டு தன்மானத்தை இழந்து பதவி சுகம் காண விரும்பும் வாழ்வெல்லாம் வெல்லமா? நீங்களே சிந்தியுங்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் என்று யோசியுங்கள். நாங்கள் மற்றவர்களுக்கு என்ன நல்லது செய்தோம் என்று சிந்தியுங்கள். நாளைக்கு நாங்கள் இறக்கும் போது எங்களுக்காக யாரேனும் அழுவார்களா என்று யோசியுங்கள்.
ஈழ இனத்தை அழிக்க திட்டம் போட்டுக் கொடுத்த பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையே போர் நிறுத்தம் பற்றி பேச தூதனுப்பியதன் நியமான காரணம் ராஜதந்திரி உங்களுக்குத் தெரியாமல் போனது அதிசயம்தான். கூப்பிடு தூரத்திலே கோடி கோடியாய் இரத்ததின் இரத்தங்கள் நீங்கள் இருக்க, வன்னியிலே எம்மினம் இரத்தம் சிந்துவதும் அதிசயம்தான். உங்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடர் என்ற பதத்தை வைத்துக் கொண்டு ஆரியரோடு கூட்டுச் சேர்ந்து சிங்கள கொடுங்கோல் அரசுக்கு தாங்கள் உதவுவதும் அதிசயம்தான்.
"ஒரே இரத்தம்" என்ற நாடகம் யாத்த நீங்கள் எண்பத்தைந்து வயசினிலும் இனத்தை விட பதவிதான் முக்கியம் என்று சுயநலவாதியாய் இருப்பதும் அதிசயம்தான்.
உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய மத்திய அரசு தூதுவரை கொழும்பிற்கு அனுப்பிய மறு நாளில் எல்லாம் குண்டுவீச்சின் வீரியம் கூடுகிறதாம். உங்களுக்குப் போற வழியில் புண்ணியமாய்ப் போகும் தயவு செய்து இனியும் தூதுவர்களை அனுப்பி எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். மத்திய அரசுக்கு தந்தி அனுப்பிவிட்டோம்...இதற்கு மேல் யாது செய்ய என்ற சாட்டுக்களை விட்டுவிடுங்கள் ஐயா. "இன்னும் ஓரு மணித்தியாலத்திற்குள் வன்னியிலே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராவிடின் தமிழகம் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும்" என்று ஒரு அறிக்கை விட்டீர்கள் என்றால் ஒரு நிமிடத்திலேயே போர் நிறுத்தம் வந்துவிடும். வேண்டாம், இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள் எதுவுமே பேச வேண்டாம். 'இனி காங்கிரஸ்தான் தமிழகத்தின் எதிரி' என்று ஓர் அறிக்கைவிட வேண்டியிருக்கும் என்று மத்திய அரசுக்குச் சொல்லுங்கள்...சொன்னபடி நடவுங்கள்...நாளையே வன்னியிலே போர் நிறுத்தம். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியவில்லை. முடிந்தால் ஈழ மக்களிற்கு உதவுங்கள். இல்லையேல் ஈழம் பற்றிக் கவிதை வரைவதை, அறிக்கை விடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.
ஐயா கலைஞர் ஐயா, ஈழத்து மக்களுக்கு சோறும், பால்மாவும் அனுப்ப வேண்டாம். முதலில் அவர்களது உயிரைக் காப்போம். ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை...கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை.
தயவுசெய்து நீங்கள் எங்கள் தலைவர் பிரபாகரனின் நண்பன் என்று சொல்லி எங்கள் தலைவனைக் கேவலப்படுத்தாதீர்கள். தங்களை மாதிரி ஒரு சுயநல விரும்பி நிச்சயமாக எங்கள் தலைவனின் நண்பனாக இருக்கவே முடியாது. உங்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் நான் ஒரு ஈழத் தமிழிச்சி என்பதாலும், பெரியவர்களைக் கனம் செய்ய வேண்டும் என்ற தமிழர் பண்புக்காகவும் விட்டு வைக்கின்றேன்.
என்னைப்போன்ற பல தமிழர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை எழுதுகின்றேன். இதை நான் உங்களைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை..சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். காங்கிரஸிடம் இன்னமும் கூட்டு வைப்பதற்காக நீங்கள்தான் அதனை அனைத்து தமிழர்களிடமும் கேட்க வேண்டும்.
வாழ்க தமிழ்
வெல்க தமிழர்
தமிழர்தான் புலிகள்
புலிகள்தான் தமிழர்
எவர் வந்து தடுத்தாலும்
விரைவில் மலரும் தமிழீழம்
இப்படிக்கு,
ஒரு தமிழிச்சி.
Tuesday, April 28, 2009
தமிழ் மீடியாக்களின் அராஜகம்!!!
கீழ்க்கண்ட செய்திகள் பல்வேறு வலைப்பூக்களில் இருந்தும், இணயதளங்களில் இருந்தும் தொகுக்கப்பட்டது. இணையதளங்களிலும், வலைப்பூக்களிலும் நேரம் செலவிடாதவர்கள் இந்த செய்தியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், நாம் பார்க்கும் எந்த தமிழக செய்தித்தாளிலும் இந்த கைது செய்தி வரவில்லை. துரோகி கருணாவின் தொடர்பேட்டியை அளித்த ‘தினமலர்’தான் பெரும்பாலும் நாம் பார்க்கும் முக்கிய இணைய செய்தித்தாள். செய்திகளை அளிக்கும் வேகத்துக்காகத்தான் நாம் இன்னும் அந்த சனியனை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தினமலரின் அட்டூழியங்கள் சொல்லி மாளாது, இந்த பதிவும் தினமலர் பற்றி மட்டுமே அல்ல. நாம் தினசரி செய்திகளுக்காக அணுகும் ஊடகங்கள் அதிகாரத்திற்கு பயந்தோ என்னவோ இந்த 13பேரின் கைது செய்தியை கொடுக்கவே இல்லை.
தமிழக செய்தி ஊடகங்கள் நடுநிலை தவறி வெகுநாளாகிறது. ஒவ்வொரு ஊடகத்தைப் பார்க்கும்போதும் அதன் சார்புநிலை என்ன என்பதை எண்ணிப்பார்த்து பின் செய்திகளை வடிகட்டி படிக்கவேண்டியுள்ளது. ராஜீவ்காந்தி மரணத்துக்கு மொத்த தமிழ்நாடும் காரணம் என்று சித்தரிக்க முயன்ற வடநாட்டு ஊடகங்களைப் பற்றி சொல்லவேண்டுமா, என்ன..? கீழே உள்ள செய்தியைப் படியுங்கள், தலையில் அடித்துக்கொள்ளுங்கள். நாம் வேறு என்னதான் செய்யமுடியும்?

13 மென்பொருள் புரோகிராமர்கள் கைது
திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தல் பயம் ஏற்பட்டுவிட்டது. மத்திய அமைச்சர் சிதம்பரத்தை எதிர்த்து மாணவர் ராஜீவ்காந்தி போட்டியிடுகிறார். இவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட 13 மாணவர்களை காங்கிரஸ், திமுகவினர் தாக்கியுள்ளனர்.
சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அம்மாணவர்களை அழைத்து மிரட்டியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தி:
On Saturday, some Congress supporters pelted stones at 13 of them as they distributed pamphlets in Alangudi market. Police rushed to the spot and took them to the Alangudi station under the pretext of protecting them, said Rajiv, but moved them to Ganga Nagar police station in Pudukkottai around 7.30 pm, booked them under sections 188,147,153, 504 and 505 of IPC at midnight and remanded them in judicial custody on Sunday morning.
சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்பதுறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 கைது
மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 பேர் நேற்று இரவு ஆலங்குடியில் 188, 147, 153(a), 504, 505 போன்ற செக்ஷன்களின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்
இலங்கை சம்பந்தமாக துண்டு பிரசுரம் கொடுக்கக் கூடாது என்று ஏதோ சட்டம் இருப்பதாகவும் அதை மீறியதற்காக கைது செய்கிறோம் என்று போலிஸ் சொல்லி இருக்கிறது.
கைது செய்யப்படுவதை படம் பிடித்த தினத்தந்தி நிருபர் காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய புகைப்படக் கருவியும் பிடுங்கப் பட்டுள்ளது
பாதுகாப்புத் தருவதாக அழைத்துச் சென்று...
இவ்விடயம் உடனடியாக தமிழீழ ஆதரவுத் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தவே ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் (CPI) காவல் நிலையத்திற்குச் சென்று நண்பர்களனைவரையும் சந்தித்திருக்கிறார். பின்னர் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்தடுத்து பிரச்சினை பெரிதாகவே இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக கூறி (இரவு 12 மணிக்கு) புதுக்கோட்டை கணேசபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரவு முழுவதும் கணேசபுரம் காவல் நிலையத்தில் வைத்திருந்துவிட்டு பின்னர் ஞாயிறு காலையில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அங்கு இவர்களுக்கு காவல் நீட்டிப்புச் செய்யப்பட்டு புதுக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரின் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
188 - இரு இனங்களுக்கு எதிரான மோதல்
143 - சட்ட விரோதமாகக் கூடுதல்
504 - தனிநபர் மீது அவதூறு பரப்புதல்
506/2 - அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல்
இரு இனங்களுக்கு எதிரான மோதல் - எந்த இரு இனங்களுக்கு எதிராக...???
சட்ட விரோதமாகக் கூடுதல் - தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்ட விரோதமா?
தனிநபர் மீது ’அவதூறு’ பரப்புதல் - தேர்தல் பிரச்சாரம் செய்யும் அத்தனை அரசியல்வாதிகளையும் கைது செய்யவேண்டுமே...
அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல் - போங்கடாங்...
தமிழ்ப்பேச்சும், சுட்டிகளின் வீச்சும்...

நம் எல்லோரையும் அசத்திய விஜய் தொலைக்காட்சியின் ‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ தற்போது ‘சுட்டிகள்’ பக்கம் திரும்பியுள்ளது. அடடா, சில மழலைகளின் தமிழ் உண்மையாகவே நம்மை அதிசயிக்க வைக்கிறது. தமிழ், தமிழகத்தில் இன்னும் சில காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்ற நம்பிக்கை கொடுத்த விஜய் டி.வி.க்கு நன்றி.
என்றாலும், சில வளர்ந்த சுட்டிகளைப் பார்க்கும்போதுதான் ‘இது என்ன கலாட்டா’ என்று நினைக்கவைக்கிறது. போகட்டும், ஆரம்ப சுற்றுகள் முடியமுடிய நமக்கு இன்னும் தெளிவாகலாம்.

ஆனால், நான் இப்போது சொல்ல விரும்புவது சிலரின் ஆரவாரமான ‘உடல்மொழி’யைப் பற்றித்தான். பெற்றோர் சொல்லிகொடுத்ததோ, அல்லது சென்றமுறை வெற்றிபெற்ற திரு.விஜயனை பின்பற்றுகிறார்களோ தெரியவில்லை. பேச்சைத் தொடங்கியவுடன் கையை, காலை எல்லா பக்கமும் ஆட்டி ஆட்டி பேசுவதும், உச்சஸ்தாயியில்(high pitch) இருந்து இறங்கிவர மறுப்பதும் பல சமயம் ‘தமிழ்ப்பேச்சை’ ம்யூட்டில் பார்க்கவைக்கிறது. எனக்கென்னவோ, பெற்றோர்கள் கைவண்ணமாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
பொங்கும் அருவிபோல் உரையாற்ற சொல்லிக்கொடுக்கும் பெற்றோர் தேவையான அளவுக்கே ‘உடல்மொழி’யைப் பயன்படுத்தவும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இல்லையெனில், என்ன பிரமாதமான உரையாக இருந்தாலும் காண்போரை சங்கடப்படுத்தும்.
‘உடல்மொழி’யை மிகைப்படுத்துபவர்களை நடுவர்கள் நிராகரித்துவிடுகிறார்கள். அது ஒன்றுதான் தற்போது நமக்கு ஆறுதல். அப்படி நிராகரிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உண்மையை உணராமல், ‘நீ சரியா பேசலை’ என்று அவர்கள் மேல் பாயாமல் இருந்தால் நல்லது.
குறிப்பு: இந்த ‘சுட்டிகள்’ நிகழ்ச்சி பற்றி வலையில் மேய்ந்தால் இந்த தலைப்பில் எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. நண்பர்கள் யாராவது கண்டிருக்கிறீர்களா?
கவிஞர் தாமரையின் அனல் பே(வீ)ச்சு...!!!
பகுதி 1:
பகுதி 2:
பகுதி 3:
ஒரு பெண் ‘எனக்கு என்ன இடர் வந்தாலும் பரவாயில்லை’ என்று கர்ஜிக்க, சில ஆண்களோ ‘எதற்கோ’ பயந்து அவரை அடக்கி உட்காரவைக்கின்றனர்.
என்னே, அவர்களது வீரம்....!!! வேடதாரிகளை கிழித்து தொங்கப்போட்ட வீரத்தமிழச்சிக்கு வணக்கங்கள்.
Wednesday, February 25, 2009
The Curious case of Benjamin Button




ஆஸ்கார் விருதுப் பட்டியலில் இடம்பெற்ற இந்த சுவாரசியமான திரைப்படத்தைப் பற்றிய பதிவு விரைவில்...
அதுவரை, புகைப்படங்கள்...(புகைப்பட வரிசைப்படிதான் கதாநாயகன் வாழ்க்கை அமைகிறது என்பதுதான் சுவாரசியம்...)
28/04/2009 - மன்னிக்கவும். நீண்ட நாட்களாகிவிட்டதால் இப்படம் பற்றிய எனது பார்வையை இப்போது சொல்வது நன்றாக இருக்காது. வாய்ப்பு இருந்தால் வேறொரு நாள் இப்படம் பற்றிய எனது கருத்துக்களை சொல்கிறேன்.
Tuesday, February 24, 2009
SDM - எந்த வகை?

ஆஸ்கார் கொண்டாட்டங்கள் ஓரளவு முடிவடைந்து மக்கள் மற்ற விஷயங்களில் கவனத்தைத் திருப்பத்தொடங்கிவிட்டார்கள். நிஜம்தான், இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றிற்கும் அல்பாயுசுதான்.
ஆஸ்கார் நாயகன் சத்தமில்லாமல் அதே புன்னகையோடு வலம் வருகிறார். ஆஸ்கார் விருதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியதே நாம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒருவர் முகத்தைத் துடைத்துக்கொண்டு வாழ்த்து அனுப்பிவிட்டார்.
இந்நிலையில், ஒரு ஜப்பானிய திரைப்படத்திற்கு ‘சிறந்த வேற்றுமொழிப்படம்’ விருது கிடைத்ததும் நண்பர்கள் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டனர். ‘ஸ்லம்டாக்’ படத்துக்கு எந்த வகையில் விருது கிடைத்தது? இந்தியாவில் எடுத்த படம்தானே என்று...
’ஸ்லம்டாக் மில்லியனர்’ ஹாலிவுட் இயக்குனரால் இந்தியாவில், இந்தியக்கலைஞர்களின் பங்களிப்புடன் எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் என்று (தேடிப்பிடித்து)தீர்ப்பு எழுதுவதற்குள்(ஹி...ஹி...) மண்டை காய்ந்துவிட்டது. தப்பாக சொல்லிடக்கூடாது இல்லையா...?
இந்நிலையில், நாம் ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர்களுக்காக பெருமைப்படலாமே ஒழிய, இந்தப்படத்துக்காக பெருமைப்பட ஒன்றுமில்லை என்பது என் கருத்து. இது மேற்கத்தியர்களுக்காக மேற்கத்தியப் பார்வையில் இந்தியாவைப்பற்றி எடுக்கப்பட்ட படம் என்றும் சொல்லலாம். படம் முழுவதும் நம்மை மட்டம்தட்டியே எடுக்கப்பட்டதை உணரலாம். சொல்வதற்கில்லை, மேற்கத்தியர்கள், இந்தியாவை மட்டம் தட்டவே இதை இந்த அளவு எடுத்துச்சென்றிருக்கலாம். படத்தின் தலைப்பை மொழிபெயர்க்கப்போனால் “குப்பத்து நாய் கோடீஸ்வரனாகிறான்” என்ற சங்கடமான பொருள் கிடைக்கும்.
இதோ, ஜூ.வி.யில் இருந்து ஒரு முக்கியமான பேட்டி(சில பகுதிகள் மட்டும்)...
மும்பை குப்பங்களில் பெரியதாக இருக்கும் தாராவிவாசிகளில்
''மும்பையில் குப்பங்கள் உருவானது எப்படி?''
''இதற்குக் காரணமே தமிழர்கள்தான். 1938-ல் ஒரு முறை தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் வறட்சி ஏற்பட்டது. அப்போது அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக மாவட்டத்தை விட்டே வெளியேறி, மகாராஷ்டிரா வந்தனர். இதில் பாதிப் பேர் சூரத்திலும் மீதிப் பேர் மும்பை நகரின் வெளிப்புறத்திலும் குடிசைகள் போட்டுத் தங்கினர். அப்போது காடாக இருந்த இங்கு, மலை சாதி மக்களுக்காக தாரா தேவி கோயில் இருந்தது. அதுவே, இந்தப் பகுதியின் பெயரானது. நாளடைவில் இந்தப் பெயர் மருவி, தாராவி என்று ஆனது. மற்ற மாநிலத்தவர்களும் தமிழர்களுடன் சேர்ந்துகொள்ள, ஆசியாவின் மிகப் பெரிய குப்பமாகி விட்டது தாராவி. சுமார் 520 ஏக்கர் பரப்புள்ள இங்கே 93 பகுதிகளைக் கொண்ட 3,600 குப்பங்கள் உள்ளன!''
''தாராவியை வைத்து எடுக்கப்பட்ட 'ஸ்லம் டாக் மில்லியனர்' படம் பற்றி...''
''எங்கள் குப்பங்களைப் பற்றி அந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயமும் அப்பட்டமான பொய்! குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாதது போல சித்திரிக்கப்பட்டுள்ளதும் அதில் ஒன்று. 2001-ல் நடந்த ஐ.ஏ.எஸ் தேர்வில், அதிக மார்க் வாங்கி பாஸ் செய்தவர், தாராவி குப்பத்துக்காரர்தான். தற்போது மும்பை கூடுதல் முனிசிபல் கமிஷனராக இருக்கும் எஸ்.எஸ்.ஷிண்டே உட்படப் பலர் இந்தக் குப்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். தற்போதுகூட இங்கு 46 எம்.பி.பி.எஸ், 38 இன்ஜினீயரிங் மாணவர்கள் உள்ளனர். மும்பையில் தென் இந்திய உணவு வகை களுக்குப் பிரசித்தி பெற்ற 'முத்துசாமி கேட்டரர்ஸ்' இயக்குநர் முத்துக்கிருஷ்ணன், இந்தக் குப்பத்தைச் சேர்ந்தவர்தான். இவர் போல நியாயமாக, உழைத்துச் சம்பாதித்த ஏராளமான கோடீஸ்வரர்கள் இந்தக் குப்பத்துக்குச் சொந்தக்காரர்கள். ஏற்கெனவே, மீரா நாயர் தன்னுடைய 'சலாம் பாம்பே' படத்தில் மும்பைக் குப்பங்களைத் தவறாகச் சித்திரித்தார். அதையும் தாராவி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அது போலவே இந்தப் படத்தையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.''
''படங்களில் காட்டப்படுவது போல் இங்கு உண்மை யிலேயே வறுமை நிலவுகிறதா?''
''நாங்கள் வறுமையாக இருப்பதாகச் சொல்லி உலக அளவில் நன்றாகக் கல்லா கட்டிவிட்டது அந்தப் படக்குழு. இந்தியாவிலேயே விலை குறைவான உணவு தாராவியில்தான் கிடைக்கும். வெறும் 15 ரூபாயில் மூன்று வேளையும் பசியாறிக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு சுமார் எட்டு லட்சம் இட்லிகள் இங்கு தயாராகி, மும்பை முழுவதும் சப்ளையாகிறது. ஒரு நாய்கூட இங்கே பட்டினியால் செத்ததில்லை. இதனால்தான், தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் இருந்து இன்றும் கூடப் பலர் தாராவிக்கு வந்து தங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள். பசி, பட்டினியில் அடிபடவா இங்கே வருவார்கள்? சொல்லப் போனால், மும்பைவாசியினர் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு இந்தக் குப்பங்களில்தான் கிடைக்கிறது!''
''ஆனால், தாராவியில் இன்னும் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்படும் சூழல் நிலவுகிறதே?''
''இங்கே 10 வயது முதல் குப்பை பொறுக்கி விற்ற முகம்மது அலி என்ற சிறுவன், இன்று தாராவியின் கோடீஸ்வரர்களில் ஒருவர். இன்றும் சுமார் 300 குடும்பங்கள், அந்தக் குப்பைகளில் கிடைத்தவற்றை விற்று தினம் ரூபாய் 300 முதல் 1,000 வரை சம்பாதிக்கிறார்கள். அதே போல், இங்குள்ள பழைய பொருட்கள் சந்தையில் வாங்கப்படும் பிளாஸ்டிக்குகளை வைத்து, பி.வி.சி. பைப்புகளுக்கான மூலப் பொருட்கள் ஏராளமாகத் தயாராகின்றன. இது தடைப்பட்டால் பொருட்கள் கிடைக்காமல், இந்தியா முழுவதும் தொழில் மற்றும் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துவிடும். அறுவை சிகிச்சையின்போது தையல் போடப் பயன்படும் ஒரு வகை நூல், இதே தாராவியிலிருந்துதான் 40 நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அதனால் குப்பையைக் கூட தொழிலாக மாற்றிக் காட்டிய அதிசய பூமி இது!''
எப்படியோ, தமிழை ஆஸ்கார் மேடையேற்றிவிட்டோம்.
கொசுறு: இவ்வளவுகாலம் அமைதியாக இருந்த மலையாளிகள் தற்போது, ஏ.ஆர்.ரகுமானை சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறார்கள். ஏ.ஆர்.ஆரின் தந்தை சேகர் கேரளாவைச் சேர்ந்தவர்.
Sunday, February 15, 2009
டேய், போதும்டா... ரீல் அந்து போச்சு...!!!
"R–µeh•, R–ZÄeh• CUV• L£QÖŒ‡ GÁ¿'' Ù^L†WyNLÁ i½�·[ÖŸ.
C‰ h½†‰ ^]SÖVL ˜ÁÚ]¼\eLZL Œ¿Y]† RÛXYŸ Ù^L†WyNLÁ ÙY¸›y|·[ L«ÛR Yz«XÖ] A½eÛL›¥ i½›£�TRÖY‰:-
R–ZŸ ÙT£«ZÖ
"GjL· YÖ²°•, GjL· Y[˜• UjLÖR R–² GÁ¿ NjÚL ˜Zjh!'' GÁ\ TÖÚY‹RÂÁ Y¡LÛ[ E›Ÿ‘†R‰ ÚTÖ¥ G¸ÚVÖ¡Á AÛZ�ÛT H¼¿ `R–ZŸ ÙT£«ZÖ' ŒL²opeh Y‹‰ 10 U‚ ÚSW• AUŸ‹‡£‹‰ ‘Á R–² YÖZ, R–ZŸ YÖZ ˜ZeL–y| ÙT£ÛU�T|†‡V GjL· A�QÚ]!
EÁ TÖReLUXjL¸¥ G]‰ L�ƒŸ ”eLÛ[ SÁ½ÚVÖ| NUŸ�‘efÁÚ\Á. EÁÛ] ÙS| ÚSW• AUW ÛY†‰ EÁ LÖ¥LÛ[ Y¦eLo ÙNš‰«yÚP]Ö? E]eh EP¥S¦ÛY E�PÖef«yÚP]Ö? EjLÛ[ ˜µÛUVÖL Y£‹‡eÙLÖ�| 10 U‚ ÚSW• J£ NÖRÖWQ ÙRÖ�PÄeLÖL LÖyzV T¡ÛY�•, TÖN†ÛR�• GµR G]eh R–³¥ YÖŸ†ÛRL· fÛPeL«¥ÛX.
R–², R–ZÄeh CUV•
G]eh J£ ÚTWÖÛN! G]eh R–²�TÖ¥ Fyz, R–²Š¸ Lyz, RÖXÖy| TÖz GÁÛ] CÁ¿ R–Z½OŸL¸ÛPÚV R–Z½‹RY]ÖL EXY«yPÚR � RÖÚ]! � RÖÚ], R–µeh•, R–ZÄeh• CUV•! G]ÚY, SÖÁ ‘\‹R FWÖ] L¦jLUÛXeh (YµRÖ±Ÿ) CUVUÖfV EÁ TÖR• T‡V ÚY�|•. CW�| UÛXLºeh• S|ÚY SÖÁ ŒÁ¿ YQjL ÚY�|• G] ŒÛ]†ÚRÁ. CR¼h LÖX• CPjÙLÖ|ehUÖ?
LÖX• CPjÙLÖ|†RÖ¨•, EÁ T‚orÛU, AR¼h ÚSW• J‰ehUÖ? ÚSW• iP fÛP†RÖ¨•, LÖY¥‰Û\ A‹R fWÖU• YÛWo ÙN¥X AÄU‡ehUÖ? ŒÛ]†‰ TÖŸ†ÚRÁ. HÁ? SÖÁ ‘\‹R fWÖU†ÛRÚV ÙTVŸ†‰ C‹R CUVUÛXÛV LÖQ AÛZ†‰ Y‹RÖ¥ GÁ]? A‰ÚY G]eh N¡ÙV] ÚRÖÁ½VRÖ¥ AÚR BXUW†ÛR, IV]ÖÛW SÖÁ ‘\‹‰ Y[Ÿ‹R hzÛNÛV, TÛ]UW†ÛR, ÚLÖ³LÛ[, UÖy|Y�zÛV, ÙS¼L‡ÛW, SÖQ¥“RÛW, ÙNjL£•ÛT G¥XÖ• ÚNL¡†‰, GÁ fWÖU†ÛRÚV ÚUÛP›ÚX � L�| Ufµ•Tz ÛY†ÚRÁ.....
.....EÁ Uz—‰ AUŸ‹‰ TÖŸeh• YVÛR SÖÁ LP‹‰ «yÚPÁ. B]Ö¥, �ÚVÖ! G]eh Uy|U¥X, C‹R EXf¥ YÖµ• JÁT‰ ÚLÖz† R–ZÄeh• RÖVÖL A¥XYÖ CÁ¿• LÖyp R£f\Öš!. R–ZÁÛ]›Á B� E£Y• GÁ¿ÚU �RÖÁ! G]ÚY, EÁÂP• J£ YW• Uy|• SÖÁ ÚLyfÚ\Á. AÛR U¿eLÖU¥ G]eh � RW ÚY�|•. A|†R ‘\« GÁ¿ JÁ¿ C£‹RÖ¥ A‡¥, SÖÁ E]eh UL]ÖL� ‘\eL ÚY�|•. � G]eh RÖVÖL C£eL ÚY�|•.
CªYÖ¿, Ù^L†WyNLÁ i½�·[ÖŸ.
நன்றி: தினத்தந்தி
அட்றா... அட்றா... அட்றா....
Tuesday, January 6, 2009
HIV+ woman elected for panchayat

We've often heard of HIV-positive people being ostracised. But in a refreshing change, people in Tamil Nadu's Kodangipatti village have elected Eswari, who is HIV-positive, to represent them in the local panchayat.
In two years, Eswari has provided the villagers with many basic amenities they were deprived of for years. "She has brought us good roads, drinking water, set right street lamps and has provided us many facilities," said a villager.
"We are ready to do anything she asks," said M Thirukannan, president, Kodangipatti Panchyat.
But behind the lady's confidence lies a tragedy. Two of her children had died of AIDS after she contracted HIV from her husband. The couple and their youngest son are now surviving on anti-retroviral drugs.
"We can achieve anything. The fact that despite HIV, I've contested and won, I think its a big achievement," said Eswari, councillor. Eswari has now dedicated her life for the prevention of HIV.
Thanks: NDTV.com
அடடே, நம்ம மக்கள் கலக்குறாங்களே... வாழ்த்துக்களும், நன்றிகளும்...!!!
வடக்கில் கொடி நாட்டிய முருகதாஸ்

பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் "கஜினி' திரைப்படம், வசூலில் இதற்கு முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என நம்பப்படுகிறது. 250 கோடி ரூபாய் வரை வசூலாக வாய்ப் புள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.பிரபல நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியான "கஜினி' இந்தி திரைப்படம், தற்போது இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரத்திலேயே 90 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. வசூலில், இதற்கு முந்தைய படங்களின் சாதனைகளை "கஜினி' முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.
பாலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது:
165 கோடி ரூபாய் வசூல் : ஷாருக் கான் நடித்த, "ரப்னே பானா டி ஜோடி' திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் 60 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதற்கு முன், அக்ஷய் குமார் நடித்த, "சிங் ஈஸ் கிங்' திரைப்படம் முதல் வாரத்தில் 55 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால், இந்த வசூல் சாதனைகளை எல்லாம் "கஜினி' திரைப்படம் முறியடித்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.சமீபத்தில் வெளியான, "ஓம் சாந்தி ஓம்' திரைப்படம் மொத்தமாக 165 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த சாதனையை "கஜினி' கண்டிப்பாக முறியடிக்கும் என தெரிகிறது. இத்திரைப்படம் 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சில வட இந்திய ‘Superiority complex' சுப்பாணிகள் இன்னும் ஒத்துக்கலே... என்னதான் அமீர்கான் படமாக இருந்தாலும், அமீரை அசத்தியது நம்ம முருகதாஸ்தானே... வாழ்த்துக்கள், முருகதாஸ். தொடர்ந்து கலக்குங்க...!!!
மகிந்த அரசின் எதிரிகள் புலிகள் மட்டுமல்ல...
”மகிந்த அரசை விமர்சித்த எம்.ரி.வி., சக்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது தாக்குதல் |
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பன்னிப்பிட்ட்டியவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான எம்.ரி.வி.யின் கலையகம் அடையாளம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. |
இத்தாக்குதலைத் தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனத்தின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2:30 நிமிடமளவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் கட்டடத்தை சுற்றிவளைத்துக்கொண்ட குண்டர் குழு ஒன்றே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிகின்றது. எம்.ரி.வி. நிறுவனம் மூன்று மொழிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன், பண்பலை அலைவரிசை வானொலிச் சேவைகளையும் மூன்று மொழிகளிலும் நடத்தி வருகின்றது. அந்நாட்டு அரசாங்கத்தின் மீது அதிகளவுக்கு விமர்சனங்களை முன்வைப்பதால் இந்நிறுவனத்தின் மீது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்மைக்காலத்தில் சீற்றமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.” பேருந்துகளில் கொண்டு செல்லப்படும் காயமடைந்த படையினர் வன்னி களமுனைகளில் பெருமளவிலான சிறிலங்கா படையினர் காயமடைந்து வருவதை தொடர்ந்து அவர்களை இருக்கைகள் அகற்றப்பட்ட பேருந்துகளின் மூலம் படைத்தரப்பு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் கூறப்படுவதாவது: வன்னி களமுனைகளில் காயமடையும் பெருமளவிலான படையினர் இருக்கைகள் அகற்றப்பட்ட பேருந்துகளில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். படையினரின் தேவைகளுக்கு போதுமான நோயளர் காவு வாகனங்கள் இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ள போதும் படையினர் பேருந்துகளில் கொண்டு செல்லப்படுவதை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி படங்களுடன் ஆதாரப்படுத்தியுள்ளது. அக்கட்சியினால் வெளியிடப்பட்ட படங்களில் பெருமளவான படையினர் பேருந்துகளில் பயணிப்பதும், அவர்களில் பலர் அவயவங்களை இழந்துள்ளதும் கவனிக்கத்தக்கது. நன்றி: புதினம்.காம் இந்த அரசுதான் மக்களுக்காக புலிகளுடன் போரிடுகிறோம் என்று சொல்கிறது. |
ஐந்திலேயே வளைத்துவிடு..!!!
தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கிளிநொச்சி மீட்கப்பட்டமை தொடர்பாக பாடசாலைகளில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மகிந்த அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு சகல சிங்கள பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படைத்தரப்பினது வெற்றி மற்றும் சிங்கள தேசியம் என்பவை குறித்து விளக்கமளிக்குமாறு அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: புதினம்.காம்
பேரினவாத சிங்கள அரசு இப்போதே நஞ்சு தூவ முற்படுகிறதோ?
பி.ஜே.பி.யின் புலிப்பாசம்
இது இவர்களின் நிஜமான நிலைப்பாடா அல்லது காங்கிரஸ் புலிகளை எதிர்ப்பதால் எடுக்கப்பட்ட திடீர் முடிவா என்பது கேள்விக்குரியது.
"Vaithiyalingam, a senior BJP leader and member of the party's national general council, proposed this idea. In an exclusive interview to a Tamil biweekly, he said that although his party did not believe in violent measures, it was unfair to impose the ideas of a Gandhian struggle on the people of Tamil Eelam.
"The British did not disregard any pact they signed with us, the Indians, during the course of our freedom struggle. But, the Sinhalese government has torn apart and rubbished three major peace pacts relating to the Eelam Tamils. In such a situation, how can anyone believe that holding talks with such a government will lead to a solution?" he asked, drawing parallels from history.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27918
நான் கடவுள் - அகோரிகளின் கதை??

தமிழ் சினிமாவின் மறுக்கமுடியாத அடையாளமான பாலாவின் நான்காவது படமான ‘நான் கடவுள்’ இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு: மனோதிடம் உள்ளவர்கள் மட்டும் இப்பதிவை மேற்கொண்டு படிக்கவும்.
‘நான் கடவுள்’ தொடர்பாக சில வலைப்பூக்களை மேய்ந்துகொண்டிருந்தபோது கிடைத்த தகவல்களால் சிறிது அதிர்ச்சி அடைந்து ‘யூ டியூப்’-இல் அகோரிகளைப் பற்றிய ஒளி-ஒலி காட்சியைப் பார்க்க நேர்ந்தது. படுபயங்கரம்.
அகோரிக்கள்(Aghories) :
சிவபெருமானின் மூன்றாவது முகமான 'ருத்ர’ முகத்தை சற்று பயமுறுத்தும் முறையில் வழிபடுபவர்களே அகோரிக்கள் என்று கூறப்படுகிறது. கங்கைக்கரையில் சிறு சிறு குழுக்களாக இருக்கும் இவர்கள், கங்கையில் ‘புனிதம்’ பெறுவதற்காக வீசப்படும் பிணங்களை இழுத்து வைத்து நடுநிசியில் மண்டை ஓட்டு பூஜை நடத்தி அந்த பிணத்தையே அறுத்து சாப்பிடுகின்றனர். இது, சுடுகாட்டு கடவுளான சிவபெருமானை படிப்படியாக அடையும் விதம் என்று கூறுகின்றனர். (கங்கை புனித நீர் என்று இன்னும் நம்புகின்றீர்களா?)
‘நான் கடவுள்’ திரைப்படத்தில் ’ருத்ரன்’ என்ற பெயரில் வரும் ஆர்யா ஒரு அகோரியாக நடித்திருக்கிறார் என்றும், இறுதிக்காட்சியில் தன் காதலியான பூஜாவின் பிணத்தையே அறுத்து சாப்பிடுகிறார் எனவும் தகவல். ’அகோரிக்கள்’ பற்றிய ஒளி-ஒலி காட்சியைப் பார்த்தபின், ‘நான் கடவுள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சியைப் பார்த்தால்(மேலே) பல ஒற்றுமைகள் தென்படுகின்றன. என்ன, படம் பார்க்க தயாரா?
பின்குறிப்பு: ‘நான் கடவுள்’ ருத்ரனுக்கும் இந்த வலைப்பூவின் பெயருக்கும் எந்த தொடர்புமில்லை. என் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த பெயரை எனக்கு தேர்வு செய்துவிட்டனர். :)
எது முன்னேற்றம்?
ஆனால், இந்த வலைப்பூக்களையும் ஆர்குட் போன்ற சமூக தளங்களையும் உள்ளே போய் பார்த்தால் தலையில் அடித்துக்கொள்ள தோன்றுகிறது. கிராமங்களில் நடக்கும் சாதிசண்டைகளுக்கு சற்றும் குறைவில்லாத, அருவருக்கத்தக்க சாதிசண்டைகள் நடந்துவருகிறது.
வெளியில் ஆயுதங்களைக் கொண்டு மோதிக்கொள்கிறார்கள். இங்கே, தாங்கள் தேடிப்பிடித்து படித்த நூல்களைக் கொண்டும், மானாவாரியாக ‘லிங்க்’குகளைக் கொடுத்தும் அடித்துக்கொள்கிறார்கள். மனதில் இருக்கும் துவேஷம் ஒன்றுதான்.
‘பார்ப்பனீய எதிர்ப்பு’, ‘பெரியாரின் மறுபக்கம்’ போன்ற விஷயங்கள் ரஜினி படங்களுக்கு ஒப்பானவை. ஆளாளுக்கு தங்கள் அறிவைக் காண்பிக்கிறோம் என்று கோதாவில் இறங்கி அடித்துக்கொண்டு தங்களையே சிறுமைப்படுத்திக்கொள்கிறார்கள்.
அடப்பாவிகளா, கடைசியில் தங்கள் கணிணி/மென்பொருள் அறிவு இதற்கா உபயோகப்படவேண்டும்? இதற்கு படிக்காத அன்றாடங்காய்ச்சி எவ்வளவோ பரவாயில்லையே...
Monday, January 5, 2009
நான் ஏன் ரஜினி ரசிகன் ஆனேன்?
90களில் ஏ.வி.எம் பள்ளியில் பங்கேற்ற ரஜினியின் பேச்சுப்பதிவு.
முதல் பாகம்:
இரண்டாம் பாகம்:
நவம்பர் 3 அன்று நடைபெற்ற ரஜினி-ரசிகர் சந்திப்பு காட்சிப்பதிவுகள்:
(ஐங்கரன் நிறுவனத்தின் பேரில் ‘எந்திரன்’ படத்தின் வியாபாரத்துக்காக இச்சந்திப்பு நடைபெற்றது என்று கூறியவர்கள் முகத்தில் கரி. ஐங்கரன் படத்தையே ‘சன்’னிடம் கொடுத்துவிட்டது. விமர்சனவாதிகள் எல்லாப் பகுதிகளையும் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.)
பகுதி 1:
பகுதி 2:
பகுதி 3:
பகுதி 4:
பகுதி 5:
”ஆச்சி 50” விழாவில் மனம் திறக்கும் ரஜினி:
அறிவுஜீவிகளுக்கு நெத்தியடி:
ஆமாம், நான் ரஜினி ரசிகன் தான்...!!!

இந்தப் பதிவு நண்பர்களுடன் நடந்த ஒரு விவாதத்தின் பாதிப்பு...
அது என்னய்யா..? ரஜினி ரசிகன்னா உங்களுக்கு ஒரு இளக்காரம்... ரஜினி ரசிகன்னு சொன்னவுடனே எங்க அறிவு, சிந்தனை, பேச்சு எல்லாத்திலேயும் ஒரு சந்தேகம்... எங்ககிட்ட கேள்வி கேட்டு, ரஜினியை விமர்சனம் பண்றதிலே ஒரு சந்தோஷம்...
ஏன், ரஜினி எந்த விதத்தில் உங்களுக்கு ஒரு சகிக்கமுடியாததா இருக்கார்? ரஜினி என்ன இந்த மாநில முதல்வரா? அவர் எடுத்த முடிவுகளினால தனிமனிதனா நீங்க பாதிக்கப்பட்டீங்களா? உங்களை யாராவது மிரட்டி ரஜினி படம் பாக்க சொன்னாங்களா? உங்க பணத்தைப் பிடுங்கி ரஜினி சொத்து சேத்தாரா? அது என்ன... ரஜினி ரசிகன் காசு வீணாக்குறான்னு உங்களுக்கு இப்படி ஒரு அக்கறை? எனக்கு புரியவே இல்லை...
ரஜினி இல்லேன்னா கமல், விஜயகாந்த், ஏன் நம்ம விஜய.டி.ராஜேந்தர்னு ஏகப்பட்ட ‘ஆப்ஷன்’ இருக்கும்போது ரஜினியோட சரிவுகளையும், நெருக்கடிகளையும் பாக்குறதுல ஒரு ஆனந்தம்... ஏன் இப்படி?
‘நான் மனநிலை சரியில்லாமல் இருந்தேன். என்னைப் பைத்தியம் என்று கேலி செய்தார்கள்’ என்று எந்த ஒரு சாதாரண மனிதனாவது ஒத்துக்கொள்வானா?
‘ஆம், சில வேளைகளில் என் முடிவுகள் தப்பாக இருந்தன. என்னைக் குழப்பவாதி என்று எழுதுவதில் தவறில்லையே’ என்று எந்த பெரிய மனிதனாவது மேடையில் பேசுவானா?
‘அரசியல் கற்றுக்கொள்ளாமல் அதில் இறங்கமாட்டேன்’ என்று பணிவாக எவனாவது இந்தக் காலத்தில் அறிவிப்பானா?
‘முதலில் உங்கள் தாய்,தந்தை, குடும்பத்தை கவனியுங்கள். பின்னர், திரையரங்கிற்கு வாருங்கள்’ என்று எந்த பெரிய நடிகனாவது அறிவுறுத்துவானா?
‘என்னால் படப்பிடிப்பு ரத்தாகக் கூடாது’ என்று இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய இன்று நடிக்கும் வண்டு, சிண்டுகள் கூட யோசிக்குமா?
நல்ல கதைகளில் நடிக்கமுடியவில்லையே என சொல்லும் ரஜினி மசாலா படங்களைத் தொடர்வது ஏன் எனக் கேட்கிறீர்கள். நாங்கள் கேட்கிறோம், ஒரு படத்தில் நடித்தால் கோடி கோடியாக சம்பாதிக்கும் ரஜினி குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு படம் நடிக்கலாமே... ஏன் இவ்வளவு இடைவெளி வேண்டும்? ஏன் இமயமலை போய் சுற்றவேண்டும்? எல்லாவற்றிற்கும் மேல் நீங்கள் உங்கள் கொள்கைகளுக்காக எல்லாவற்றையும் இழந்து வாழ்கிறீர்களா அல்லது பிழைப்புக்காக விட்டுக்கொடுத்து வாழ்கிறீர்களா... மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.
இதற்கெல்லாம் முதலில் பதில் சொல்லுங்கள்.
வார இதழ்களில் வரும் அறிவுஜீவிகளின் கட்டுரைகளையும், பகிரங்கக் கடிதங்களையும் நம்பி பேசாதீர்கள் நண்பர்களே... அவர்கள் எந்நேரமும் நிறம் மாற்றிக்கொள்வார்கள்.(உதா: விகடனின் இந்த வார ‘எந்திரன்’ கவர்ஸ்டோரி)
ரஜினி ரசிகன் மீது அக்கறையிருந்தால் ரஜினி படம் ஓடும் திரையரங்குகள் சென்று அவனை நிறுத்திப் பிடித்து அறிவுரை வழங்குங்கள். குறைந்தபட்சம் ரஜினியின் அடுத்த படத்திற்கு உங்கள் குடும்பத்தில் இருந்தாவது(உங்களையும் சேர்த்து) யாரையும் அனுப்பாமல் இருங்கள்.
குறிப்பு: இது என் பக்கத்திற்கான பதிலே தவிர எந்தவொரு விவாத்தில் பங்கேற்கவும் எண்ணம் இல்லை. எனவே, பின்னூட்டத்தில் என் பதிலை எதிர்பாராதீர்.
தமிழினத் தலைவரும் தமிழனின் தலையெழுத்தும்

தமிழன் என்று சொல்லுவதற்கே பல தகுதிகள் தேவைப்படும்போது, தமிழினத் தலைவர் என்று போற்றப்பட அவர் என்னென்ன செய்திருக்கவேண்டும் அல்லது செய்ய முற்படவேண்டும் என்ற சந்தேகம் என் மனதிற்குள் உண்டு. இலங்கைத் தமிழர் போராட்டத்திற்காக குரல் கொடுத்தால் களிதான் என திருவாய் மலர்ந்திருக்கும் முதல்வர் ’தமிழினத்தலைவர்’ என்று அவ்வப்போது தமிழகத்திற்கு அறிவிக்கப்ப்டும்போது நகைப்பாக மட்டுமல்ல, கடுப்பாகவும் உள்ளது.
5 முறை முதல்வர் ஆகி, 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்தபின்னும் பதவிக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் மானத்தை இழக்கத் துணிந்தவர் நம் முதல்வர்.
தன் மானத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் தன்மானத்தையும் தன் இலவசத்திட்டங்கள் மூலம் அசைத்துப்பார்த்தவர்.
மத்திய மந்திரி பதவிகளுக்காக ஆதரவு தர இழுத்தடித்தவர், ஈழத்தமிழர்கள் விஷயத்தில் மட்டும், வருடக்கணக்காக ‘பதவியைத் துறக்க தயார்’, ‘உயிரைக் கொடுக்கத் தயார்’ என்று முழங்கும் வாய்ச்சொல் வீரர்.
அய்யா, தமிழுக்கு உம்மை விட்டால் ஆளில்லை என்று சொன்னவன் நான். ஆனால், உங்கள் கேவலமான சுயநல அரசியலால்தான் இன்று கிளிநொச்சி கைவிட்டுப் போனது என்று உங்கள் ஒருத்தரை மட்டும் குற்றம் சாட்ட இன உணர்வு கொண்ட எந்தத் தமிழனுக்கும் எந்த தயக்கமும் இல்லை.
எல்லாரிடமும், எல்லா விதத்திலும், எல்லா வசவுகளையும் வாங்கிக்கொண்டும் நெஞ்சு நிமிர்த்தி உட்கார்ந்திருக்கும் தங்களிடம் என்னத்தை எதிர்பார்ப்பது?
ஹும்... பெருமூச்சு விடத்தான் முடிகிறது.