கீழ்க்கண்ட செய்திகள் பல்வேறு வலைப்பூக்களில் இருந்தும், இணயதளங்களில் இருந்தும் தொகுக்கப்பட்டது. இணையதளங்களிலும், வலைப்பூக்களிலும் நேரம் செலவிடாதவர்கள் இந்த செய்தியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், நாம் பார்க்கும் எந்த தமிழக செய்தித்தாளிலும் இந்த கைது செய்தி வரவில்லை. துரோகி கருணாவின் தொடர்பேட்டியை அளித்த ‘தினமலர்’தான் பெரும்பாலும் நாம் பார்க்கும் முக்கிய இணைய செய்தித்தாள். செய்திகளை அளிக்கும் வேகத்துக்காகத்தான் நாம் இன்னும் அந்த சனியனை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தினமலரின் அட்டூழியங்கள் சொல்லி மாளாது, இந்த பதிவும் தினமலர் பற்றி மட்டுமே அல்ல. நாம் தினசரி செய்திகளுக்காக அணுகும் ஊடகங்கள் அதிகாரத்திற்கு பயந்தோ என்னவோ இந்த 13பேரின் கைது செய்தியை கொடுக்கவே இல்லை.
தமிழக செய்தி ஊடகங்கள் நடுநிலை தவறி வெகுநாளாகிறது. ஒவ்வொரு ஊடகத்தைப் பார்க்கும்போதும் அதன் சார்புநிலை என்ன என்பதை எண்ணிப்பார்த்து பின் செய்திகளை வடிகட்டி படிக்கவேண்டியுள்ளது. ராஜீவ்காந்தி மரணத்துக்கு மொத்த தமிழ்நாடும் காரணம் என்று சித்தரிக்க முயன்ற வடநாட்டு ஊடகங்களைப் பற்றி சொல்லவேண்டுமா, என்ன..? கீழே உள்ள செய்தியைப் படியுங்கள், தலையில் அடித்துக்கொள்ளுங்கள். நாம் வேறு என்னதான் செய்யமுடியும்?

13 மென்பொருள் புரோகிராமர்கள் கைது
திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தல் பயம் ஏற்பட்டுவிட்டது. மத்திய அமைச்சர் சிதம்பரத்தை எதிர்த்து மாணவர் ராஜீவ்காந்தி போட்டியிடுகிறார். இவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட 13 மாணவர்களை காங்கிரஸ், திமுகவினர் தாக்கியுள்ளனர்.
சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அம்மாணவர்களை அழைத்து மிரட்டியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தி:
On Saturday, some Congress supporters pelted stones at 13 of them as they distributed pamphlets in Alangudi market. Police rushed to the spot and took them to the Alangudi station under the pretext of protecting them, said Rajiv, but moved them to Ganga Nagar police station in Pudukkottai around 7.30 pm, booked them under sections 188,147,153, 504 and 505 of IPC at midnight and remanded them in judicial custody on Sunday morning.
சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்பதுறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 கைது
மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 பேர் நேற்று இரவு ஆலங்குடியில் 188, 147, 153(a), 504, 505 போன்ற செக்ஷன்களின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்
இலங்கை சம்பந்தமாக துண்டு பிரசுரம் கொடுக்கக் கூடாது என்று ஏதோ சட்டம் இருப்பதாகவும் அதை மீறியதற்காக கைது செய்கிறோம் என்று போலிஸ் சொல்லி இருக்கிறது.
கைது செய்யப்படுவதை படம் பிடித்த தினத்தந்தி நிருபர் காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய புகைப்படக் கருவியும் பிடுங்கப் பட்டுள்ளது
பாதுகாப்புத் தருவதாக அழைத்துச் சென்று...
ஆலங்குடி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி மற்றும் நண்பர்களை திமுக குண்டர்கள் தாக்கியுள்ளனர். அவர்களே காவல் நிலையத்திற்கும் தகவல் தந்துள்ளனர். அங்கு வந்த காவல் துறையினரோ இங்கு தொடர்ந்து பிரச்சாரம் செய்தால் பிரச்சினை எழ வாய்ப்பிருப்பதால் அங்கிருந்து வெளியேறும்படி வற்புறுத்தியுள்ளனர். நமது நண்பர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பாதுகாப்புக்காக எனக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இவ்விடயம் உடனடியாக தமிழீழ ஆதரவுத் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தவே ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் (CPI) காவல் நிலையத்திற்குச் சென்று நண்பர்களனைவரையும் சந்தித்திருக்கிறார். பின்னர் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்தடுத்து பிரச்சினை பெரிதாகவே இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக கூறி (இரவு 12 மணிக்கு) புதுக்கோட்டை கணேசபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரவு முழுவதும் கணேசபுரம் காவல் நிலையத்தில் வைத்திருந்துவிட்டு பின்னர் ஞாயிறு காலையில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அங்கு இவர்களுக்கு காவல் நீட்டிப்புச் செய்யப்பட்டு புதுக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரின் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
188 - இரு இனங்களுக்கு எதிரான மோதல்
143 - சட்ட விரோதமாகக் கூடுதல்
504 - தனிநபர் மீது அவதூறு பரப்புதல்
506/2 - அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல்
இரு இனங்களுக்கு எதிரான மோதல் - எந்த இரு இனங்களுக்கு எதிராக...???
சட்ட விரோதமாகக் கூடுதல் - தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்ட விரோதமா?
தனிநபர் மீது ’அவதூறு’ பரப்புதல் - தேர்தல் பிரச்சாரம் செய்யும் அத்தனை அரசியல்வாதிகளையும் கைது செய்யவேண்டுமே...
அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல் - போங்கடாங்...
இவ்விடயம் உடனடியாக தமிழீழ ஆதரவுத் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தவே ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் (CPI) காவல் நிலையத்திற்குச் சென்று நண்பர்களனைவரையும் சந்தித்திருக்கிறார். பின்னர் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்தடுத்து பிரச்சினை பெரிதாகவே இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக கூறி (இரவு 12 மணிக்கு) புதுக்கோட்டை கணேசபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரவு முழுவதும் கணேசபுரம் காவல் நிலையத்தில் வைத்திருந்துவிட்டு பின்னர் ஞாயிறு காலையில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அங்கு இவர்களுக்கு காவல் நீட்டிப்புச் செய்யப்பட்டு புதுக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரின் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
188 - இரு இனங்களுக்கு எதிரான மோதல்
143 - சட்ட விரோதமாகக் கூடுதல்
504 - தனிநபர் மீது அவதூறு பரப்புதல்
506/2 - அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல்
இரு இனங்களுக்கு எதிரான மோதல் - எந்த இரு இனங்களுக்கு எதிராக...???
சட்ட விரோதமாகக் கூடுதல் - தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்ட விரோதமா?
தனிநபர் மீது ’அவதூறு’ பரப்புதல் - தேர்தல் பிரச்சாரம் செய்யும் அத்தனை அரசியல்வாதிகளையும் கைது செய்யவேண்டுமே...
அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல் - போங்கடாங்...
No comments:
Post a Comment